Thursday 20 September 2012

சில வரிகள்

பணத்திற்கு நாம் தான் அதிக மதிப்புக் கொடுக்கிறோமே தவிர இறைவன் அதற்கு மதிப்புக் கொடுத்ததாய் தெரியவில்லை. இல்லா விட்டால் அதைத் தகுதி இல்லாதவர்களிடமும், அயோக்கியர்களிடமும் கொடுத்து வைப்பாரா?
-யாரோ

உனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்துக் கொண்டு போனால் அழிவு தான். இராவணன் சீதையைக் கொண்டு போன மாதிரி.
-ராஜாஜி

ஒரு மனிதனை நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அவன் பதில்களைப் பாராதே. கேள்விகளைப் பார்.
-வால்டேர்

மற்றவர்களின் தீய குணங்களை நாம் கற்களில் செதுக்குகிறோம். ஆனால் அவர்களது நற்குணங்களை ஓடுகிற தண்ணீரில் எழுதுகிறோம்.
-விகடர் ஹ்யூகோ


உன் அழகிலே மனமகிழ்கிறாயா? ரோஜாவும் கூடத்தான் மிக அழகாய் இருக்கிறது. ஆனால் அது சீக்கிரம் வாடிப் போய் விடுகிறது. மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வு தான் அளிக்கப்படுகிறது. ஆகவே அதை எண்ணி மகிழாதே.
-கிரேக்கக் கவிதை

அனுபவம் என்பது நமது பொருள்களையெல்லாம் இழந்தபின் எஞ்சியிருப்பது.
-காரனெட்

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
-மில்டன்

சின்ன விஷயங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கப்பலின் அடித்தளத்தில் விழும் ஓட்டை கப்பலையே கவிழ்த்து விடுமல்லவா?
-ஃபிராங்க்ளின்

பசியுள்ள ஒரு நாயைக் காப்பாற்றினாயானால் அது உன்னைக் கடிக்காது. மனிதனுக்கும், நாயிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான்.
-மார்க் ட்வெயின்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு குறிப்புப் புத்தகம். ஒரு கதை வரைய நினைத்து மற்றொன்றை வரைகிறான். எழுத நினைத்ததோடு எழுதியதை ஒப்பிடுங்கால் அதுவே வாழ்க்கையின் மிக இழந்த காலமாகும்.
-ஹென்றி ஃபீல்டு

No comments:

Post a Comment